tag:blogger.com,1999:blog-36083367909358136332024-02-07T09:37:28.918+05:30சோழகக்கொண்டல்காற்று வந்து பகிர்ந்துதரும் கனவுகள்Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-54202785149232461002017-03-06T21:43:00.000+05:302017-03-06T21:43:16.631+05:30காற்றில் துளிர்க்கும் யாழ்
அ. முத்துலிங்கம் எழுத்தில் கனவென தூரத்தில் மிதக்கும் பால்யத்தின் நிலம்.
எங்கள் ஊர் கொள்ளிடக்கரையில் வானுக்குள் தலை நுழைத்து அரைநூற்றாண்டு வயதுடைய ஆலமரம் நிற்குமிடமே பிரதான நீர்த்துறை. அக்கரை கண்ணுக்கெட்டாத தூரம்வரை நீலம்பாரித்து நெடும்புனல் பாய்ந்த காலம் முதல், திசையின் தொடுப்புள்ளி வரை வெற்று மணலாகி கிடக்கும் இந்நாள் வரையிலும் அதுதான் நீர்த்துறை. எம் தகப்பனாருடைய காலத்திற்கு Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0Canada56.130366 -106.34677099999999-9.4242829999999955 88.41885400000001 90 58.88760400000001tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-91413666949959401832016-10-18T02:31:00.001+05:302016-10-28T00:50:27.440+05:30உலர்ந்துருகும் வேனில்
இக்கணம்
நீண்டு நிகழ்ந்தபடியே இருக்கிறது
பூக்களின் புன்னகையில் ஒளிரும்
வெயில் உதிர்ந்துவிட்ட மாலையாய்
இவ்விடம்
மீட்டி முழங்கியபடியே இருக்கிறது
ஈரம் குறுகுறுக்கும் தொண்டைக்கும்
இறங்கிச்செல்லும் நெஞ்சுக்கும் வெளியே
கால்வைத்து ஏறி நடக்கும்
காற்றின்மேல்
நீரின் நினைவை
இந்நிலம்
இறைஞ்சிக்கொண்டே இருக்கிறது
உலர்ந்து உதிரும்
ஒவ்வொரு சருகிலும்
மழை மழை என்று கிறுக்கியபடி
Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-31960268914969576302016-10-06T03:30:00.000+05:302016-10-06T03:30:01.978+05:30சோப்புநுரை வானங்கள்
வானத்து நிறங்கள் காட்டும்
சோப்புநுரை குமிழுக்கு
உள்ளேயும் வெளியேயும்
எனது முகங்கள்
நான் கீழிருந்து மேல்பார்த்தால்
மேலிருந்து கீழ்பார்க்கிறது
எனது முகமே கொண்ட
பரவெளியின் பேருருவம்
பிம்பங்கள் கண்பொருந்தும் கணத்தில்
காற்று நுழைந்து உடைக்கும் வானம்
சூன்யத்தில் சேரும்பொழுதில்
இரண்டில் ஒரு நான்
இல்லாமலாகிறேன்
அங்கிருந்தும் Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-70435222641530547752016-05-16T20:45:00.000+05:302016-05-16T20:45:05.035+05:30எதற்காக எழுதுகிறேன் ? - காலத்தைக் கருவுறும் விதைகளை கனவின் உலகங்களிலிருந்து சேகரித்தல்.
காலடி மண்ணில் கவனிக்கபடாமல் கிடக்கும் மகரந்தச் செறிவை, மண்துகளின் நுண்ணிடைவெளியில் தன் உடலால் அளந்து உமிழால் செரித்து உலகுக்குக் காட்டும் மண்புழுவைப் போலவே நான் எழுதுவதென்பதும். பூமிப்பரப்புக்கு மேலே கொஞ்சம் புடைத்துத் தெரியும் அந்தப் புழுவின் எருக்குமிழ் போல, உணர்வின், மொழியின் தரைத்தளத்திலிருந்து துருத்தித் தெரியும் குரல்.
அட்ச தீர்க்க ரேகைகளோடு வரைந்தளிக்கபட்ட வாழ்வும் அதன்மீது Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-1774323051761587882015-09-22T02:17:00.000+05:302015-09-22T02:17:16.901+05:30கவிதை எனும் வேதாளம்
முடிவிலியென உறைந்திருக்கும்
காத்திருப்பின் அலமாரியிலிருந்து
சட்டென இன்று
தனித்துத் தெரியும்
ஒற்றைப் புத்தகத்திற்குள்
குவிந்து விழுந்தெழுந்து மனம்
கொத்திக்கொண்டுவரும் ஒற்றைவரியில்
எஞ்சியிருக்கிறது
ஒரு வேதாளத்தின் கைவெப்பம்
அந்த வெப்பத்தில் வேர்விடுகின்றன
எப்போதோ விழுந்த விதைகள்,
முளைவிடுகின்றன குருதியும் கோழையும் வடியும்
உதிரிச்சொற்கள்
மெல்ல மெல்ல Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-51283109427057663802015-09-03T16:20:00.000+05:302015-09-03T16:20:10.888+05:30ஞானத்தெருநாய்
வெளிர்க்காவி நிறத்தில்
வற்றிய வயிறும்
ஒடுங்கி ஒளிரும் கண்களுமாய்
குத்துக்கால் ஆசனத்தில்
மானுடத்தை நோட்டமிட்டபடி
மோனத்தில் வீற்றிருக்கிறது
ஞானத்தெருநாய்
திறந்த வானின்கீழ்
திசையெங்கும் வீடென்றலைந்தும்
தன் எல்லைவரை மட்டுமே
அருள்பாலித்து மீளும்
சிறுநீர்க்குறிச் சித்தன்
கயமையை கண்டவிடத்து
காலபைரவன் ஆகிவிடக்கூடும் இருந்தும்
கைப்பிடிச் சோற்றுக்கே
Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-76609770250291506772015-08-31T12:59:00.000+05:302015-08-31T12:59:54.785+05:30வீடு திரும்பும் கால்கள்
இங்கே முடிகிறது
பாதையும் பாதமும்விட்டு
பாதுகை பிரியும்படி என் பயணம்
காலம்வந்து இடம்பெயர்த்துவிட்டது
என் இருப்பை
காத்திருப்பின் இருக்கையிலிருந்து.
யாருக்காகவோ காத்திருக்கவும் தொடங்கிவிட்டது
இந்த நுண்கணத்து வெற்றிருக்கை
பாதச்சுமையாகவோ
பாதைத்துணையாகவோ இருந்த
அடையாளங்கள் அனைத்தும்
அறுந்து வீழ்கின்றன
ஆண் பெண்ணென்ற பேதமும்
அர்த்தமற்று களையும் இந்த புள்ளியில்
மனதின்Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-68774665341505455882015-08-19T21:05:00.000+05:302015-08-19T21:05:15.904+05:30யாளியும் அன்னமும்
விசையுற்று விரிந்த சிறகு
அசைவற்று உறைந்த கணத்திலேயே
ஆயிரம் ஆண்டுகளாய் நிற்கிறது
இந்த அன்னம்
அதன் முதுகின்மேல்
துருத்திய கண்களோடும்
தூக்கிய கால்களை
பிளந்து முளைத்த
தும்பிக்கையோடும் விழிக்கிறது
ஒரு யாளி
இரண்டுக்குமிடையில்
எதிர்த்தூண் மன்மதன்
எய்யும் மலர் அம்புக்காய்
காலங்காலமாய்
காத்துநிற்கிறாள்
ரதி
மலர்க்கணை துளைக்கையில்
Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-20456098179284538692015-08-18T00:00:00.000+05:302015-08-18T00:00:30.876+05:30ஊறுகாய் பாட்டில்
ஊறுகாய் பாட்டிலின்
அடிப்புறத்தில் எப்போதும்
தன் கையொப்பமிட்ட கடிதத்தை
வைத்து அனுப்பிவிடுகிறது வீடு
மூடித்திறக்கும் ஒவ்வொருமுறையும்
வெளிக்கிளம்பி அறையெங்கும்
தன் நினைவை ருசியை
ஊறச்செய்தபடி இருக்கும்
அரைக்கரண்டி ஊறுகாய்க்கு ஒருமுறை என
முந்நூறு மணி அடித்ததும்
தரைதட்டுகிறது கரண்டி
தானே திறந்துகொள்கிறது கடிதம்
பின்பு யாருடைய Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-46730695907502845632015-07-13T15:05:00.000+05:302015-07-14T13:11:28.261+05:30இன்னும் ஒருபிடி அவல்
எங்கிருக்கிறாய்
என் தோழனே குசேலா
துவாரகை வனம்கிடக்கும்
தனியன் கிருஷ்ணன்தான்
எங்கிருக்கிறாய் இப்போது
ஒருபிடி அவலை
எத்தனை யுகங்களுக்கு
மெல்வது?
நீல நரம்புகள் புடைத்து தெறிக்க
பாதத்தில் இறங்கிய பாணம்
பச்சை விஷத்தை மட்டும் ஏற்றிவிட்டு
நெளிந்து கிடக்கிறது துருவேறி
மரணமும் கைவிட்டதோ உன்
மனத்திலும் என் பெயரழிந்ததோ
திசையும் தொலைவும் Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-67559782861652313642015-06-22T01:55:00.000+05:302015-06-24T00:01:24.161+05:30தனிமையின் தேநீர்விருந்து
" தனிமையின் பாடகன் சோழகக்கொண்டல் கவிதைகளில் இவ்வாரம், தனிமையின் தேநீர் விருந்து. கவிஞர் அருந்துவது தேநீரா கண்ணீரா என்று தெரியவில்லை- சீனாவில் கசப்பை உண்டு இனிப்பைச் சுவை என்றொரு பழமொழி இருப்பதாகக் கேள்வி. சோழக்கொண்டல் கவிதைகள் கசப்பில் இனிப்பு கரைந்த கலவை. இவ்வார தேநீர் அதன் இன்னொரு சான்று."
- பதாகை 22 ஜூன் 2015
பின்னிரவிலும் அணைக்கப்படாமல்
Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-85769037045720884622015-06-03T23:03:00.003+05:302015-06-03T23:08:11.432+05:30காத்திருக்கும் தனியறை
பூட்டிய கதவுக்குப் பின்னால்
காத்திருக்கிறது
பிசுபிசுக்கும்
தனிமை திரவம்
கதவின் தொப்புல் முடிச்சில்
வெறித்தபடி தொங்கும்
பூட்டின் கண்வழி
சொட்டுச்சொட்டாய்
ஊறி வடிகிறது
உள்ளிருக்கும் திரவம்
சாவித்துவாரத்தில்
கைகள் தழுவி
நடுங்கும் பொழுதில்
கதவைத் துளைத்துகொண்டு
கட்டிலில்போய் விழுகிறது
எனக்கு முன்பே மனது
நீந்திக்கடந்திட முடியா
நெடுந்தொலைவில் நிற்கின்றன
இந்த அறையின் Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-74378599689280636442015-06-01T16:00:00.000+05:302017-02-20T10:04:50.292+05:30நத்தை வீடு
எந்த இரவிலும் தவறவிடாமல்
எப்படியும் திரும்பிவிட வேண்டும்
என்று நினைக்கும் வீடு
எல்லோருக்கும் ஒன்று உண்டு
இரவில்தான் இருப்பை முகிழ்க்கும் என்றாலும்
இடமோ காலமோ லட்சியமில்லை
இந்த வீட்டிற்கு
யாருடைய பயணத்திலும்
முதலில் மடித்து வைக்கப்படும் முகவரியும்
திட்டமிடாத நிச்சயத்துடன்
உடனழைத்துச்செல்லப்படும்
சகபயணியும் இதே வீடுதான்
களைப்பின் Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-72256973438574931612015-05-29T01:52:00.000+05:302015-05-29T01:52:24.655+05:30சொல்லிச்செல்பவன் இல்லாத கதைகள்
சொல்லிச்செல்பவனின்
குரல் இல்லாமல்
தானே நிகழும் கதைகளை
கேட்டபடியே நிற்கிறது
காலத்தை அசைபோடும்
இந்த ஆலமரம்
இரவுக்குள் தலை நுழைக்கிறது வானம்
இருளுக்குள் உயிர் கொள்கின்றன கிளைகள்
கிளிகள் குயில்கள்
காகங்கள் கொக்குகள்
இன்னும் ஆயிரம் சத்தங்கள்
இனிக்கும் ஆயிரம் முத்தங்கள்
ஒலிகள் மொழிகள் ஆக்கப்படாமல்
ஒலிகளாகவே பேசப்பட்டு
ஒலிகளாகவே கேட்கப்படுகின்றன
Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-15992748850142859222015-05-21T01:10:00.001+05:302015-05-21T01:10:38.029+05:30உலகின் மறுமுனையில் வீடு
எனைக் கவ்விச்சூழ்ந்திருக்கும்
காலநாகத்தின்
நடுக்கண்டத்தில் நான்
தலையையும் வாலையும்
தானேயறியாத விஷநதியின்
அகால இருளுக்குள்
என்னில் எஞ்சியது எதுவுமில்லை
படுக்கை விரிப்பில்
சிறு கலைவும் இல்லை
அடைத்த கதவுகளுக்குப்பின் உறைந்த
சாளரத்திரைகளும்
விலக்கப்படுவதேயில்லை
என்குரல் எப்படி இருக்குமென்று
யாரிடமாவது கேட்கவேண்டும்
மீண்டும் Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-40357841874073401252015-05-13T22:25:00.000+05:302015-05-13T22:25:16.964+05:30பைனரி காவியம்
இருத்தல் இல்லாதிருத்தல்
அல்லது
இல்லாதிருத்தல் மட்டுமே
எஞ்சியிருத்தல் எனும்
இரட்டை நிகழ்தகவுகளை தாங்கிய
ஒற்றை நாணயத்தால்
அளக்கப்படும் புடவி
இயல்பில் உறையும் சுழியும்
இயல்பு திரியும் ஒன்றும்
அடுத்தடுத்து நிகழும்
எந்திர மொழியில்தான்
எழுதப்பட்டிருக்கிறது
படைப்பின் மந்திர கவியும்
புல்லிவட்டம்
அல்லிவடம்
பூவொரு முழுவட்டம்
பூமறைக்கும் Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-7353643355004776842015-05-04T21:06:00.000+05:302015-05-04T21:09:57.199+05:30கைவிடப்படுதல்
வாசல் வந்தமரும் சிட்டுகளுக்காக
நான் வீசியெறியும் நெல்மணிகள்
பயந்து எழுந்து
பறந்து மறையும்
குருவிகள்
யாருக்கும் வேண்டாமல்
வீதியில் கிடக்கின்றன
எனது நெல்மணிகள்
நதியின் நீரைக்
கரைதழுவும் விளிம்பில்
நூறு தவளைகள்
தண்ணீர் பாம்புகள்
என் காலடி பட்டதும்
சட்டென கலைந்து
அலையெழ மறைகிறது
ஒரு காட்சி
தனியரங்கில்
வெறும்திரை பார்த்துநிற்கும்
கண்கள்
நிலம்Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-73426789875329120282015-05-01T22:33:00.000+05:302015-05-05T10:56:43.793+05:30மைசூரில் கும்பமுனி
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்துவிட்டு வேலையின்றி வேலையை எதிர்பார்த்து மைசூரில் தங்கியிருந்த காலம். வீட்டிலிருந்து பணம் வருவதும் பெறுவதும் இழிநிலை என்று நினைத்த லட்சியவாத காலம் என்றும் சொல்லலாம். அனுப்பும் அளவிற்கு வருமானம் வீட்டில் யாருக்கும் இல்லையென்று உண்மையையும் சொல்லலாம். இருந்த அரை ஏக்கர் நிலத்தையும் அடகு வைத்துதான் முதுகலை சேர்ந்தது. என்னோடு பசியைப் பகிர்ந்து Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-56289284953752733392015-04-27T11:57:00.000+05:302015-04-27T11:57:14.735+05:30ஆடிகள்
காட்சிகளும் கோணங்களும்
மாறியபடியே இருக்கும்
ஆடியொன்று வைத்திருக்கிறேன்
நானும்
பிரம்மம் தன் முகம்பார்த்து
இருப்பென எழுந்துவரும்
சின்னஞ்சிறு குழியாடி
காலத்தில் பின்னோக்கி நகரவும்
கனவுகளில் முன்னோக்கி புனையவும்
கூடிய குவியாடி
பூவுக்குப் பூவையும்
புன்னகைக்கும் அதையேதான்
திருப்பிக்காட்டும்
எளிய கண்ணாடிதான் என்றாலும்
காட்சிகளை மறைத்துக்கொள்ளும்
கள்ளத்தனமும் பழகியதுதான்
ஒரு Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-21320699616078627322015-04-20T00:17:00.000+05:302015-04-21T23:08:26.213+05:30கண்ணாடிச் சாளரம்
சோழகக்கொண்டலின் கண்ணாடிச் சாளரம் வாழ்வின் வண்ணங்களை அதன் மாயம் கெடாத புதிர்த்தன்மையுடன் விரித்துக் காட்டுகிறது.
Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-63169853584903070282015-04-14T00:23:00.000+05:302015-04-14T00:25:37.886+05:30கடைசிக் கனவு
இலக்கின்றி
எல்லையுமின்றி
மிதந்து மிதந்தேறி
மெல்லப் பறக்கிறேன்
சூரியன் சென்று மறைந்த பாதையில்
காத்திருக்கும்
பொறுமையற்ற மனம்
காற்றில் சருகாய் அலைகிறது
விடியல் கூடாத திசைகளில்
நான் ஏங்கியலைந்த
பூக்களெல்லாம்
பழுத்துக் கிடக்கின்றன
தூங்காது கிடந்து
துரத்திய இலக்குகள்
காலாவதியாகிவிட்டன
ஏற்றிவந்த இறகுகளையும்
எண்ணி எண்ணி
உதிர்க்கிறேன்
கற்று வந்த எதையும்
கசந்து காற்றில்
Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-76600331172944277552015-04-06T11:30:00.002+05:302015-04-10T10:02:53.667+05:30 உள்ளிருந்து உளவுபோதல்
உளக்காட்சிகளை வெளிப்படுத்தும் சொற்தேர்வுகளில் தனித்துவ பாணியை கொண்ட கவிதைகளை எழுதிவரும் சோழகக்கொண்டல் இவ்வாரம், தன்னிடமிருந்து தனிமையை யார் மீட்டுத்தந்தாலும் எஞ்சுவது தனிமைதான் என்பதை தவிப்போடு சொல்கிறார்.
- பதாகை
என்னிடமிருந்தே
என் தனிமையை மீட்டுத்தரும்படி
நான் கேட்பதற்கு யாருமில்லை
யார் மீட்டுக்கொடுத்தாலும்
எஞ்சுவதை தனிமையென்று
நம்புவதற்கில்லை
உயிரின் Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-78864363698093454302015-04-01T15:00:00.000+05:302015-04-01T16:04:20.753+05:30மதுவற்றவனின் இரவுவிடுதி
"குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஓசை நயமும் கற்பனை வளமும் கொண்ட கவிதையை எழுதியிருக்கிறார் சோழகக்கொண்டல்" - பதாகை
--- கோப்பைகளின் கதை ---
Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-63474608423231650852015-03-30T01:36:00.000+05:302015-03-31T02:35:05.941+05:30வீடுகள்
நெடுநாட்களுக்கு முன்பு
எங்கள் எல்லோருக்காகவும்
கட்டப்பட்டது
ஒரு வீடு
அதிலிருந்து
எங்கள் ஒவ்வொருவருக்குமான
தனித்தனி வீடுகளை
பிரித்தெடுத்து
நாங்களே கட்டிக்கொண்டோம்
ஒரு கார் நிறுத்துமிடமும்
ஒரு புத்தக அலமாரியும்
ஒரு மர நாற்காலியும்
வெண்ணிற கம்பிகள் கொண்ட
ஒரு ஜன்னலும்
அதன் வழி தெரியும்
ஒரு மரமல்லி மரமும்
மூன்று செம்பருத்திச் செடிகளும்
மட்டுமே கொண்டது
என் வீடு
கார் Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3608336790935813633.post-8678568264078738032015-03-27T13:01:00.000+05:302015-03-29T19:32:54.522+05:30யாருமற்ற வீடு
உளவுபார்த்தபடியே இருக்கும் கனவுகள்
உள்ளம் வந்து ஏறிக்கொள்கின்றன
வீடு திரும்புகையில்
காற்றில் ஆடியபடியே இருக்கின்றன கதவுகள்
ஒரு கால்தடமும் கண்டதில்லை
காத்திருக்கிறேன்
நிறைந்து நெரிகிறது முற்றம்
நேரமெல்லாம் சிரிப்பொலிகள்
நித்திரையில்
பூத்து மடிகிறதென் தோட்டம்
புதுமழைக்கு ஏங்கும் வேரில்
உலர்கிறது ஈரம்
வீட்டுக்கு பின்னால் ஓடும் Anonymoushttp://www.blogger.com/profile/13844474834442781380noreply@blogger.com0