பசித்த பகல்

பசி என்பது வெறும்
உண்பதற்கு முன்பிருக்கும்
உணர்வல்ல
 
அழுந்தக் குத்தும் முள் -
பசியை விழுங்கும் போது
தொண்டையில் கசியும் வலி
நெஞ்சில் ஆறாத் தழும்பாகும்
 
யாரும் அறியாமல்
தனிமைபடுத்தும் -
இயலாமையில் கை நடுங்கும்
 
பசி தரும் வலியில் மட்டுமே
மனிதன் அழும் சக்தி இழக்கிறான்
 
பசி உடலை விடவும்
உள்ளத்தை ஆழத் தைக்கும் நோய்
 
தொடர் பசியில்
தொண்டையில் இறங்கும் நீர்
இரத்தக்குழாயை கீறிடும் ஒலி
காதுகளுக்குக் கேட்காமல்
அடைத்துவிடும்
 
கண்களில் தெரியும்
பசித்தவர்களுக்கு மட்டும்.

4 comments:

Bass said...

because of this poem i saw my past days with the hungry. thanks 2 remember it for me..........
By Agnibaskaran.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

பசித்த பொழுதுகளின் வெதும்பும் கண்ணீரே
முயற்சி விதைகளின் மீது
விழும் மழையாக இருக்கட்டும்

siva said...

everyone should taste the hunger. it teaches more than a teacher.