மணல் விளையாட்டு



















பெண்ணின் பெண்துகளும்
ஆணின் பெண்துகளும்
இணைந்து
பிறந்து பெண்ணாகிறது

பெண்ணின் பெண்துகளும்
ஆணின் பெண்மையை மறைக்கும்
நுண்துகளும் மட்டுமே இணைந்து
பிறந்தது ஆணாக்கப்படுகிறது

படைப்பு தன் இச்சை
முகம்பார்க்கும்
புடைத்த கண்ணாடியை
ஆணெனக்கண்டு அள்ளிக்குடிக்கிறது

ஒடுங்கிய பெண்மையை
உள்ளீடாகக் கொண்டதோ
சின்னஞ்சிறு மேடுகளைக் கண்டு விடைத்தும்
பள்ளங்களில் விழுந்து குழைந்தும் போகிறது

படைப்பதில் அன்பின் இடம்
மெல்ல பாலையாகிறது
படைக்க முடியாததில் அது
பாறையின் கருவறை நீராகிறது

வடிந்து விலகும் நீரின் திசையில்
பாலை உள்சுருங்குகையில்;
மனமே மார்பென ஊறிடும் பாறை
உடைந்திட ஏங்கி குளிர்ந்து தளர்கிறது

தேனுள்ள மலர்களை மட்டும்
தேடி அமரும் வண்டுபோல
ஈரமுள்ள பாறையின் மீது
தன் இயல்பை வரைகிறது பிரபஞ்சம்

எப்போதும் பசித்திருக்கும்
அந்த பிள்ளையின் பொய்யழுகையில்
பாறையைச் சூழ்ந்த ஆணெனும்
முரண்துகள் உடைகிறது

அகமார்பில் ஊறும் பெருங்காதல்
ஆழித்துளை மீறிப்பொங்கிடும்
ஆண்வழி
அதன் ஊற்றுக்கண்ணிலும் இருக்கிறது
ஒரு ஆதிப் பெண்துகள்

பாறையை சிதைத்து
பாலையில் தூவி மறைகிறது
கடைசிக்காற்று

மணலில் விளையாடும் பெரும்பிள்ளை
மீணடும் ஒரு பெண் துகளையும் - அதை
முடக்கியதாய் நடிக்கும் துகளையும்
செய்யக்கூடும்.

மனம் எனும் தனிப்பறவை






















எதனது கண்கள் வழியேயும்
தன்னையே பார்த்துக்கொள்வதாய்
நினைத்துக்கொள்ளும் பிரபஞ்சத்தின்
சிறு கூட்டில்
நனைந்த சிறகுகளோடு
அமர்ந்திருக்கும் ஒரு பறவை

ஈரம் கூடும்தோறும்
எடைகூடும் பறவைக்கு - இனி
எழுந்து பறக்க வழியேயில்லை

வெளிபரவும் மெல்லிய ஈரத்தின்மீதும்
இரக்கமற்று வீசி
தடமின்றி உலரச்செய்யும்
வாழ்வின் காற்றால்
ஏக்கமும் உடைய
உள்ளிருந்து பெருகுகிறது
ஒளிகசியும் ஒரு பெருநீர்ச்சுனை

எனினும்
இடைபடும் தன்னிரக்கப் பெரும்பாலை
எந்த சுனையிலும் பசியடங்கா
தீத்துளை – நனைந்த சிறகோ
வெறும் தளை

புலன்களாய் சிதைந்துகிடக்கும் தடங்களில்
உருகிவழிந்து, பறவையை
உலரச்செய்தபடியே இருக்கிறது
ஆதிவினையில் சூல்கொண்ட பசி

பறவைக்கும் பறத்தலுக்கும் இடையிலும்கூட
ஊறி இறங்குகிறது
ஊழியெனப் பெருகும் நீர்

துவளும் சிறகுகள்
துடுப்பாவதொன்றே
ஈரத்தோடும் எடைதுறந்து மீண்டும்
கட்டற்று அலையும் வழியென
கண்டுகொள்கையில்
காலம் ஏதும் மிச்சமில்லை
அந்த தனிப்பறவைக்கு.


நன்றி : சொல்வனம்


இன்று பெற்றேன் இரவின் கையொப்பம்

மறக்காமல் இரவு
எனக்காக எழுதும் கடிதம்
இங்குதான் இருந்திருக்கின்றது
ஒவ்வொரு நாளும்
என் வீட்டு வாசலில்

குனிந்துபார்க்கவும் நேரமில்லாததுபோல்
எனக்குள் இருக்கும் அலுவலகத்திற்குள்
உழன்றபடியே கடந்து போயிருக்கிறேன்
ஒவ்வொருமுறையும் இந்தவழியில்

வீடுதிரும்புவதற்குள்
வெயிலில் உலர்ந்து
காற்றில் மறைந்த அந்தக்
கடிதங்களின் செய்திகளை
எங்கேப்போய் தேடுவது?

உள்ளறையின் நித்திரையில்
நான்கண்ட கனவுகளெல்லாம்
உறக்கம் கலைகயில் வெளியேறி
இந்தப்பூக்களில்தான்
பூத்து கிடந்திருக்கின்றன

பகல்கனவுகளின் இருளில்
குருடனாய் அலைந்திருக்கின்றேன்
என் அகக்கனவுகள்
காலாவதியாவது தெரியாமல்

விழித்துக்கொள்வதற்குள்
வாடி நிறமிழந்து
மட்கிய பூக்களின் முகமெல்லாம்
இப்போது எங்கே பூத்திருக்கும்?

இனி எந்த கடிதத்தையும்
தவறவிடப் போவதில்லை
எனக்குப் புரியாமொழியில் இருப்பினும்.

எந்தப்பூவின் துளித்தேனையும்
மிச்சம்வைக்கப் போவதில்லை
என் இழப்பின் கசப்பை
ஈடுசெய்யும் வரையிலும்.

இரவுகள் மனம் கனியட்டும்.


நன்றி : சொல்வனம்

மறக்காமல் இரவு
எனக்காக எழுதும் கடிதம்
இங்குதான் இருந்திருக்கின்றது
ஒவ்வொரு நாளும்
என் வீட்டு வாசலில்
குனிந்துபார்க்கவும் நேரமில்லாததுபோல்
எனக்குள் இருக்கும் அலுவலகத்திற்குள்
உழன்றபடியே கடந்து போயிருக்கிறேன்
ஒவ்வொருமுறையும் இந்தவழியில்
வீடுதிரும்புவதற்குள்
வெயிலில் உலர்ந்து
காற்றில் மறைந்த அந்தக்
கடிதங்களின் செய்திகளை
எங்கேப்போய் தேடுவது?
உள்ளறையின் நித்திரையில்
நான்கண்ட கனவுகளெல்லாம்
உறக்கம் கலைகயில் வெளியேறி
இந்தப்பூக்களில்தான்
பூத்து கிடந்திருக்கின்றன
பகல்கனவுகளின் இருளில்
குருடனாய் அலைந்திருக்கின்றேன்
என் அகக்கனவுகள்
காலாவதியாவது தெரியாமல்
விழித்துக்கொள்வதற்குள்
வாடி நிறமிழந்து
மட்கிய பூக்களின் முகமெல்லாம்
இப்போது எங்கே பூத்திருக்கும்?
இனி எந்த கடிதத்தையும்
தவறவிடப் போவதில்லை
எனக்குப் புரியாமொழியில் இருப்பினும்.
எந்தப்பூவின் துளித்தேனையும்
மிச்சம்வைக்கப் போவதில்லை
என் இழப்பின் கசப்பை
ஈடுசெய்யும் வரையிலும்.
இரவுகள் மனம் கனியட்டும்.
- See more at: http://solvanam.com/?p=35842#sthash.8bRomFGU.dpuf
மறக்காமல் இரவு
எனக்காக எழுதும் கடிதம்
இங்குதான் இருந்திருக்கின்றது
ஒவ்வொரு நாளும்
என் வீட்டு வாசலில்
குனிந்துபார்க்கவும் நேரமில்லாததுபோல்
எனக்குள் இருக்கும் அலுவலகத்திற்குள்
உழன்றபடியே கடந்து போயிருக்கிறேன்
ஒவ்வொருமுறையும் இந்தவழியில்
வீடுதிரும்புவதற்குள்
வெயிலில் உலர்ந்து
காற்றில் மறைந்த அந்தக்
கடிதங்களின் செய்திகளை
எங்கேப்போய் தேடுவது?
உள்ளறையின் நித்திரையில்
நான்கண்ட கனவுகளெல்லாம்
உறக்கம் கலைகயில் வெளியேறி
இந்தப்பூக்களில்தான்
பூத்து கிடந்திருக்கின்றன
பகல்கனவுகளின் இருளில்
குருடனாய் அலைந்திருக்கின்றேன்
என் அகக்கனவுகள்
காலாவதியாவது தெரியாமல்
விழித்துக்கொள்வதற்குள்
வாடி நிறமிழந்து
மட்கிய பூக்களின் முகமெல்லாம்
இப்போது எங்கே பூத்திருக்கும்?
இனி எந்த கடிதத்தையும்
தவறவிடப் போவதில்லை
எனக்குப் புரியாமொழியில் இருப்பினும்.
எந்தப்பூவின் துளித்தேனையும்
மிச்சம்வைக்கப் போவதில்லை
என் இழப்பின் கசப்பை
ஈடுசெய்யும் வரையிலும்.
இரவுகள் மனம் கனியட்டும்.
- See more at: http://solvanam.com/?p=35842#sthash.8bRomFGU.dpuf

எல்லை

கடலாழத்து
நீருக்குள் இருக்கும்
குடுவைக்குள் இருக்கும்
நீருக்குள்
மூன்று மீன் குஞ்சுகள்

முதல் குஞ்சு
அதே குடுவையில் பிறந்தது
இரண்டாவது குஞ்சு
அதே போல் இருக்கும் சிதைந்துவிட்ட
வேறொரு குடுவையில் பிறந்தது
மூன்றாவது குஞ்சு
குடுவைகளையறியாத
பாறையிடுக்கில் பிறந்தது

இந்த குடுவையின்
அடித்தளத்தில் தொடங்கும் கடல்
மிக நீண்டது –
அதன் இருள்
குடுவையின் இருளைப்போல
பன்மடங்கு கரியது என்றது முதல்குஞ்சு

நீண்டு பரந்த கடலின்
ஒரு புள்ளியில் கிடக்கிறது
ஒளி நுழையாத அடியாழத்தில்
இந்த குடுவையென்றது
மூன்றாவது குஞ்சு

சிறிய குடுவையின்
சிறிய இருள்போல்
பெரிய கடலில்
பெரிய இருளோ என்று குழம்பிய
இரண்டாவது குஞ்சு
எதுவும் பேசாமல்
குடுவையின் சுவரைப்
பற்றிக்கொண்டது

ஆத்திரத்தோடு குடுவையின்
இருளாழத்தில் பாய்ந்தது முதல்குஞ்சு
தர்க்கத்தில் இணைந்து
தாவிப் பாய்கையில்
வெளி விளிம்போடு நின்றது
இரண்டாவது குஞ்சு
கடலுக்குள் சுழன்று சுழன்று
நீந்திக்காட்டியது
மூன்றாவது குஞ்சு

நீ குடுவையை அறியாததால்
வெளியே பாய்கிறாய் என்று
முதலும்
குடுவையில்லாததால்தான்
உள்ளே நுழைகிறாய் என்று
இரண்டாவதும் சொல்ல
வார்த்தையிழந்தது மூன்று

எனக்குக் குடுவையையே தெரியும்
எனவே நீ சொல்வது
உண்மையில்லை என்று
முதலும்
எனக்கே எதுவும் தெரியாததால்
உனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
என இரண்டாவதும் சொல்ல
மீண்டும் குடுவையிழந்தது
மூன்றாவது குஞ்சு.


நன்றி : திண்ணை  


கவிதை வந்து விழும் கணம்

















கவிதை வந்து விழுகின்ற கணத்தில்
காலம் இடம் களைந்து
நிர்வாணமாவதே முதல் வினை

கனவுக்குள் அமிழும் கணம்தோறும்
உடைகள் உதிர்கின்றன

பறந்துவந்து இறங்கும்
உதிரிச்சொற்கள் ஒவ்வொன்றும்
கவிதையை நோக்கி கைகாட்டிவிட்டு
அதிர்வின்றி அமர்கின்றன
தும்பிகளைப்போல

வயதும் பாலும் குணமும் கலைகிறது
உதிரிச்சொற்கள்  ஒளியிழக்கின்றன
மொழியும் உதிர்கிறது பதட்டமாகிறேன்

அகமும் உடைந்து
ஒவ்வொரு சில்லும் உருகிட
‘நான்‘ கலைந்து இருண்டபின்
கவிதை மட்டும் இருந்தது

நீண்ட இடைவெளிக்குப்பின்
பிசுபிசுவென்ற திரவத்திற்குள்
எங்‌கோ துடிக்கிறது இதயம்

உயிர்ப்பிக்கும் ஒரு பெருமூச்சிற்குப் பிறகு
கனவை உடைத்துக்கொண்டு
வெளியேறி

சிதறிக்கிடக்கும் உதிரிச்சொற்களின்
கோடிட்ட இடங்களை
வலிந்து நிரப்புகிறேன் - ஒரு
பயணக்கட்டுரையைப் போல.

மீண்டும் காத்திருக்கிறேன் - தானே
ஒரு கவிதை வந்து விழும் கணத்திற்காக.



“சொல்வனம்“  இதழில் பிரசுரமான கவிதை.


இணைய இதழ்
http://solvanam.com/?p=35209







சொல்வனம்

ஊசித்தும்பி












ஒரு தேன்துளியின் எடையில்
கால்பங்கே இருக்கும் ஊசித்தும்பி

அதனினும் மெல்லிய
அளவிலும் நுண்ணிய
நெல் பூவில் வந்து ஒட்டுகிறது

கடுகினும் சிறியதுளி
தேன்கண்டு உண்டபின்பு

மின்னணுவின் துரிதத்தில்
கண்ணுக்குச் சிக்காமல் படபடக்கிறது
அதன் கண்ணாடிச் சிறகு

தொடுவானம் வரை இருக்கும்
நெல்வயலின் ருசி - அந்தத்
தும்பிக்குள் விழுந்து பறக்கிறது.



இரவுக்குத் தப்பிய வானம்


நீர்ப்பரப்பின்  தொடுவானத்தில்
கீழிறங்கும் ஆகாயம்
நடுங்கும் நீரலைகள்  மேல்
நெளியும் பாம்புகளாய்
ஊர்ந்து வந்து
கால்களில் ஏறுகிறது

இரவுக்குத் தப்பிய வானமோ
நனைந்த அப்பளமாய் மிதக்கிறது.
  

காதலி வராத நாளின் வகுப்பறை


நிலவில்லாத நாளிலும் 
இரவு விழித்துதான் இருந்தது 
நட்சத்திரங்களோடு. 
காதலி வராத நாளின் வகுப்பறை

இரவுக்கு முன்பே வந்து நிலா 
வெயில் காய்வதும் உண்டு
வகுப்புகள் தொடங்காத நேரம்

ஒரு சந்திக்காலம் என்பது இதுவரை 
ஒளியும் இருளும் 
கரைந்து பிணையும் கனவே.



நான் எனும் நிகழ்வு



உலகம் எனும் சிறு நிகழ்வில்
நான் எனும் நுண் நிகழ்வு
ஒரு எஞ்சிய குப்பையா
மகரந்தத்  துகளா

எப்படியும் காமமே இந்த
நிகழ்வின் மீது வீசும் காற்று.

இருப்பு எனும் திசையிலி படகில்
சிந்தனை என்பது
துடுப்பேதானா அல்லது 
தோன்றி மறைந்து
மீண்டும் வேறிடம் தோன்றும்
நீர்ப்புகும் துளையா

எப்படியும் காலமே இதன்
விடையிருக்கும்
முத்திரையிடப்பட்ட குடுவை.

வாழ்வெனும் கட்டற்ற நதியில்
உறவுகள் என்பது
அணையிடும் கரையா
கரைபடும் மணலா

எப்படியும் அன்பு ஒன்றுதான்
நதியின்
ஈரம் நிலைக்கும் பள்ளம்.


கால நிகழ்வெளியின் ஆதி மையம்














அதற்குமேலும்
பிரிக்கவோ விரிக்கவோ முடியாத
புள்ளியொன்று
தனக்குள்ளே சுழன்றுகொண்டு 

அண்டமெங்கும் சிதறிக்கிடந்த
கண்கள்வழி
தன்னையே பார்த்துக்கொண்டது 

அதற்கு தனிமையில்லை - ஏனெனில்
அது தானே இல்லையென்று நினைத்தது 

தன்முனைப்பால்
சிதைந்து குழம்பிய மையம்
கடைசியாய் மனிதனை பிரசவித்தபோது
இறந்ததாய் சொல்லப்படுகிறது 

அதன் ஆவி
இன்னும் இங்கு உலவுவதாய்
புத்தன் போன்றோரால்
நம்பவும் படுகிறது 

தன் நினைவடுக்கை காலம் எனவும்
நிகழ்விருப்பை வெளி எனவும்
அதுவே பின்னாளில் பெயரிட்டதால்
இறந்திருக்க வாய்ப்பில்லை என
அறிவியலும் சொல்கிறது. 

எஞ்சியிருந்த ஊடல்

இரவு இன்னும் மிச்சமிருக்கும் அதிகாலையில்
சோம்பல் முறிக்கிறது காமம்
தீரத்தழுவுகையில் விழித்துக்கொள்ளும்
எஞ்சியிருந்த ஊடல்
திரும்பிப் படுத்துக்கொண்டது.

அதன் எடை
அசைக்கவும் முடியாதது.


முகநூல் முனி

 
முகநூலைக் கடித்து
மூன்று வேலையும் தின்னும்
தற்குறி முனியொன்று தான்வந்து பதிவிடும்
கேளுங்கள் பதர்களே என்று

ஆயிரம் வரிகளில் நீளும் ஆய்வுப்பதிவுகள்
அறிஞனை அசடனென்றும்
போகியை புத்தனென்றும் பொய்யர நிறுவி

படிக்காத நூல்களுக்கும் பதவுரை எழுதும்
பதர்களுக்குத்  தெரியுமா என்ன
பதிவுக்கு நகல் தந்த மூலப்பதிவு

ஆன்மீக ஆய்வுகளோ ஐந்து தளம் மீண்டெழும்
'பத்துப் பதிவுகளில் பரமனை அடைவதெப்படி'
'பாபாவின் மாமாவும் பச்சைத்தமிழனே'

உன் அப்பன் தமிழனென்றால்
ஒப்புகொள்,  உடனே  விரும்பு
பகிர்ந்து விடு இதை என்றும் மிரட்ட

ஆயிரம் வேண்டா 'விருப்பு'களுக்கும்
ஐம்பது நூறு 'போற்றி'களுக்கும் பிறகு வந்தது
எதிர்க்குரல் முனியொன்று

பாபாவின் மாமா தமிழனோ  தானறியேன்
ஆனால் மாமி ஒரு மலையாளி
ஒரு காதல் கதைக்கே கால்முளைத்தது

மீண்டும் ஆயிரம் 'விருப்புகள்', 'போற்றிகள்'
மூண்ட மொழிப்போரில் மாண்ட சரித்திரத்தை
தோண்டிப் புதைத்தது  பின் வந்தப்  பெரும்படை

தோழி வேட்டையில் உலகம்சுற்றி தோல்வியுற்று
கடைசியில் தனது பொய்க்கணக்கை
தானே காதலித்த கூட்டத்தில் சேர்ந்து

உலக அழகிகளின் முகத்தைப் பெயர்த்தெடுத்து
ஒட்டிக்கொண்டதேவதைகளை
போற்றிப்பாடப்  போய்விட்டது அந்த முனி.










நெஞ்சில் விழுந்த முடி



கங்கையின்  குறுக்கே  விழுந்த
வாலியின் வாலாகக் கணக்கிறது
காற்றில் கலைந்தெழுந்து
கன்னத்தில் விழுந்த
ஒற்றை முடி

காதல் கோணம்

எந்தக் கூட்டத்திலும்
நம் கண்கள்
ஊடுருவி  சந்திக்கும் கோணமே
காதல் கோணம்.