யாருமற்ற வீடு

















உளவுபார்த்தபடியே இருக்கும் கனவுகள் 
உள்ளம் வந்து ஏறிக்கொள்கின்றன
வீடு திரும்புகையில்

காற்றில் ஆடியபடியே இருக்கின்றன கதவுகள் 
ஒரு கால்தடமும் கண்டதில்லை
காத்திருக்கிறேன்

நிறைந்து நெரிகிறது முற்றம் 
நேரமெல்லாம் சிரிப்பொலிகள்  
நித்திரையில்

பூத்து மடிகிறதென் தோட்டம் 
புதுமழைக்கு ஏங்கும் வேரில் 
உலர்கிறது ஈரம்

வீட்டுக்கு பின்னால் ஓடும் நதி 
வீதியோடு திரும்பும் காற்று 
தனித்திருக்கிறது வீடு 

 இப்போது நானும் 
அங்கில்லை.

நன்றி : எழுத்து.காம்
-------------------------------------------------------------------------------------------------------------------------

வீடு என்பதை, மனம், முதுமை, காதல் என்ற பொருள்களிலும் வாசிக்கலாம்.

No comments: