கலைந்த மழை














மழைக்காலத்தின் ஈரம்
மனதின் வேருக்குள் விழுகையில்
கடந்தகாலம் துளிர்த்து
கண்களில் மலரும்

பாதம் சில்லிடுகையில்
பால்யம் திரும்பி இதயத்தில் சொட்டும்

கனவில் எதிர்காலம் கருவுறும்

மழைபூச்சியாகி மனம்
வானத்தில் நீந்தும்

வானம் வெளுக்கையில் கனவு மீண்டு
வானவில்லாய் கலையும்

நீரற்ற மீனாய் நெஞ்சமோ
நிகழ்காலத்தில் கிடக்கும்.


No comments: