இரவுக்குத் தப்பிய வானம்


நீர்ப்பரப்பின்  தொடுவானத்தில்
கீழிறங்கும் ஆகாயம்
நடுங்கும் நீரலைகள்  மேல்
நெளியும் பாம்புகளாய்
ஊர்ந்து வந்து
கால்களில் ஏறுகிறது

இரவுக்குத் தப்பிய வானமோ
நனைந்த அப்பளமாய் மிதக்கிறது.
  

No comments: